Monday, March 18, 2019

நான் மனித உரிமைகளை மீறவில்லை. எனக்கு பின்னால் வந்தவர்கள் செய்திருக்கலாம் என்கிறார் சரத் பொன்சேகா

இலங்கையின் யுத்த காலப்பகுதியில் பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக, செய்திகள் வெளிவருகின்றன. எனினும் தமக்கு பின்னர் அதாவது, யுத்தத்தின் பின்னரே இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் யுத்த காலப்பகுதியின் போது இராணுவத்தினர் சட்டவிரோத குற்றங்களிலோ, மனித உரிமை மீறல் செயற்பாடுகளிலோ ஒருபோதும் ஈடுபடவில்லை. அதற்கான முதன்மையான காரணம், யுத்த காலத்தில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இராணுவத் தலைமை மற்றும் அரசாங்கம் என்பன அனுமதியளிக்கவில்லை என்பதாகும்.

எனினும் முப்பது ஆண்டுகால யுத்தம் வெற்றிகொள்ளப்பட்ட பின்னர், சில சட்டவிரோதச் செயல்கள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்ட சரத் பொன்சேகா,
அக் காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய குற்றங்களுக்கான தகுந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தல் விடுத்தார்.

எனினும் மேற்படி மனித உரிமை மீறல் குற்றங்களுக்கான தீர்வுகள் சர்வதேசம் இன்றி, உள்நாட்டு நீதிமன்றத்தினூடாகவே பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறினார்.

No comments:

Post a Comment