Thursday, March 21, 2019

இரண்டு கட்சிகளுக்கிடையிலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் கூட்டணி அமைப்பது தொடர்பான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற ஏற்பாடாகியுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதலாவது பேச்சுவார்த்தை கடந்த 14ம் திகதி இடம்பெற்றது. இரண்டு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரும் கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment