வட மாகாண மக்களின் எல்லாச் பிரச்சினைக்கும் தீர்வு தீர்வு கொடுப்பாராம் ரவி கருணாநாயக்க
அரசாங்கம், வடக்கில் உள்ள மக்களின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் முறையான தீர்வை வழங்கும் என, மின்சக்தி வலுவூட்டல் அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வட மாகாணத்திற்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்க, யாழ்.நல்லூர் ஆலயத்திற்கு சென்று பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள கட்சியின் ஆதராளர்கள், உறுப்பினர்களுடன் சம்பாஷணையில் ஈடுபட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அரசாங்கம் வட மாகாண மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை தொடர்பில் கருத்து வெளியிட்டார். அத்துடன் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில், பயங்கரமான சூழல் நிலவியதாகவும், ஆனால் இப்போது நிலைமை மாறி, அனைவரும் சுதந்திரமாக வாழக்கூடிய சந்தர்ப்பத்தை தமது அரசாங்கமான ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment