Thursday, March 14, 2019

இலங்கை மக்களை, இந்த அரசாங்கம் முட்டாள்களாக்கியுள்ளது - நாமல் ராஜபக்ச

இலங்கை மக்களுக்கான சிறந்த சேவைகளை வழங்குவதாக தெரிவித்து இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. எனினும் கடந்த நான்கு ஆண்டு காலமாக இந்த அரசாங்கம் இலங்கை மக்களை முற்றாக ஏமாற்றி முட்டாள்களாக்கியுள்ளதாக, பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பாதீடு குறித்த குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது, நாமல் ராஜாக்ஸ இதனை குறிப்பிட்டார்.

இலங்கை மக்களுக்கான சிறந்த சேவைகள், இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சி அமைத்த பின்னர் வடக்கு மக்களின் பொருளாதாரம் பெருமளவு சீரழிந்துள்ளது. அதனை மீட்க இதுவரையிலும் அரசாங்க தரப்பினரால், குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனிடையே ''என்டர்பிரைஸ் சிறிலாங்கா'' வேலைத்திட்டம் என்ற போர்வையில் இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக கடன்சுமையை திணித்துள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.

என்டர்பிரைஸ் சிறிலாங்கா கடன் திட்டத்தின் மூலம் மக்களுக்கு வீடு கட்ட கடன் கொடுக்கின்றீர்கள். ஆனால் மக்கள் காணி இல்லாமல், காணி உறுதிகள் இல்லாமல் தத்தளித்து வருவது குறித்து, அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை.

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச சீனாவிடம் கடன் வாங்கியதாக, அரசாங்க தரப்பினர் ஒருகாலத்தில் குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இலங்கை சீனாவின் கடன் பொறிக்குள் ஒருபோதும் சிக்கவில்iலை

எனினும் தேர்தல் காலத்தில் மீண்டும் சீனாவின் கடன் குறித்து இந்த அரசாங்கம் பேசி வருகின்றது. இவ்வாறு கடந்த நான்கு வருடங்களாக இலங்கை மக்களை அரசாங்கம் முட்டாள்கள் ஆக்கி விட்டதாக , பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment