Sunday, March 10, 2019

சீனா இலங்கைக்கு கடன் வழங்காது - சரத் அமுனுகம

முன்னர் போன்று நாட்டிற்கு கடன் வழங்க சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவினால் இலங்கைக்கு கடன்கள் துரிதமாக வழங்கப்பட்டன. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சீனா கடன்களை வழங்க தாமதிக்கிறது. அப்படி கடன்களை வழங்க வேண்டும் என்றால் மேலதிக நிபந்தனைகளை சீன இலங்கைக்கு விதிக்கின்றது.

சீனா இவ்வாறு நடந்து கொள்வதற்கு முக்கிய காரணம் தற்போதைய அரசாங்கம் சீனாவை விமர்சித்தமையே ஆகும். உண்மையில் தற்போது கடன் பிரச்சினையினை இலங்கை எதிர்நோக்கி இருக்கிறது என்றால், இதற்கு சீனா காரணம் இல்லை. சீனாவை இலங்கை விமரிசித்து இருக்கிறது. ஆனால் சீனாவை விட இலங்கை ஜப்பானிடம்தான் அதிகளவு நிதியை கடனாக பெற்றுள்ளது என்ற சரத் அமுனுகம மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment