Sunday, March 10, 2019

வரவு செலவு திட்டம் குறித்து வெளியிடப்பட்ட கருத்துக்கள்

பாராளுமன்றத்தில் இடம்பெறும் 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான் விவாதம் நேற்று இடம்பெற்றது. விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பழனி திகாம்பரம், நாட்டின் அபிவிருத்திக்கான வரவு செலவுத்திட்டம் இதுவென குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்களின் சுகநலத் தேவைகளுக்காக இந்த முறை வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை நாட்டின் சகல துறையினரையும் உள்ளடக்கும் வகையில் இந்த வரவு செலவுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டும் இதுவரை முன்வைத்த சகல வரவு செலவுத்திட்டங்களையும் விட இந்த வரவு செலவுத்தி;ட்டம் சிறந்த பிரதி இலாபங்களைக் கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலபத்தி குறிப்பிட்டார்.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல யோசனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பிரதி அமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்தார்.

இந்த முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை வலுப்படுத்தும் வகையில் காணப்படுவதாக பிரதி அமைச்சர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.

இந்த வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வங்கிக் கடனை பெறுவதற்காக வினைத்திறனுடன் கூடிய நேரடி தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்தார்.

பெண்களை வலுப்படுத்துவதற்கான பல யோசனைகள் இந்த வரவு செலவுத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் துஷித்தா விஜேமான்ன தெரிவித்தார்.

இதேவேளை நிலையான அபிவிருத்தியும், அதற்கான யோசனைகளும் இந்த வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post a Comment