Saturday, March 16, 2019

பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கண்டிக்கத்தக்கது - சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்

நியுஸிலாந்தில் பள்ளியில் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு வன்மையாக கண்டிக்கத்தக்கது என, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசு இந்த மிலேச்சத்தனமான காரியத்தை கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமுல்படுத்துவதற்கு நியூசிலாந்து அரசை வலியுறுத்த வேண்டும்

நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள டீன் அவென்யூ அடுத்ததாக லின்வூட் அவென்யூ பகுதியில் உள்ள இரு பள்ளிவாசல்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்களை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டன் கூறுகையில்,"நியூஸிலாந்தில் இதற்கு முன் இதுபோன்ற மோசமான வன்முறைச் செயல்கள் நடந்ததில்லை. அதற்கு இடமும் இல்லாமல் இருந்தது. அப்படி இருக்கையில் இன்று நடந்த வன்முறைச் செயலை நியூஸிலாந்தின் கறுப்பு நாள் என்று சொல்வேன்” என்று கூறினார்.

மக்கள் சுதந்திரமாக தங்கள் வழிபாட்டை நடத்தி வந்த இடத்தில், பாதுகாப்பாக இருந்த இடத்தில் இந்த மோசமான துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த செயலைச் செய்தவர்கள் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளார்கள். இதுபோன்ற செயலுக்கு நியூஸிலாந்து சமூகத்தில் இடமில்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த மிலேச்சத்தனமான கொடூர செயல்பாட்டை சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதுடன், இதில் ஈடுபட்டவர்கள், தொடர்புடையவர்கள் அனைவர் மீதும் கடுமையான முறையில் தண்டனையை அமல்படுத்துவதுடன், இது போன்ற காரியங்கள் இனியும் நடைபெறாமல் உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment