நாட்டின் சிறிய காணித்துண்டையேனும் வெளிநாட்டவர்க்கு தாரைவார்க்க ஒருபோதும் அரசாங்கம் இடமளிக்காதென காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கயந்த கருணாதிலக்க இதனை குறிப்பிட்டுள்ளார். காணி உறுதிப்பத்திரம் இல்லாத 10 இலட்சம் பேருக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாக கூறிய வாக்குறுதியை தற்போது மாவட்ட ரீதியாக நாங்கள் நிறைவேற்றி வருகின்றோம். அந்தவகையில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத அரச நிறுவனங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள் ஆகியவற்றை இனங்கண்டு அவைகளுக்கும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வருகின்றோம்.
மேலும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் மக்களுக்கும் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இவ்வாறு மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வருகின்றாம். இந்நிலையில் எமது நாட்டின் வளங்களை, வெளிநாட்டவர்களுக்கு வழங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்' என கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment