Saturday, March 9, 2019

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதி சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழப்பு

ஐ.எஸ் அமைப்பில் இணைந்த பிரித்தானிய யுவதியான சமீமா பேகம் பிரசவித்த குழந்தை உயிரிழந்திருப்பதாக சிரிய நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீமா பேகம் கடந்த 2015 ஆம் ஆண்டு பள்ளி மாணவியாக இருந்த பொழுது பிரித்தானியாவில் இருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்தார். இந்த நிலையில் யுத்தத்தில் ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினராக தமது கணவரை இழந்த சமீமா பேகம், சிரிய அகதி முகாம் ஒன்றில் இருப்பதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

தாம் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் குழந்தை பேற்றுக்காக தமது சொந்த நாடான பிரித்தானியாவுக்கு திரும்ப விரும்புவதாக அவர் தெரிவித்திருந்தார். எனினும் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர்களை தமது நாடு ஒருபோதும் ஏற்காது என பிரித்தானியா அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில் கடந்து மூன்று மாதங்களுக்கு முன்னர் சிரிய அகதி முகாமில் சமீமா பேகம் குழந்தை ஒன்றை பிரசவித்தார். மூன்று வாரங்களே ஆன அந்தக் குழந்தை நிமோனியா காய்ச்சல் காரணமாக தற்போது உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment