Tuesday, March 19, 2019

சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல் - இன்று திருகோணமலை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் விசேட கவனம்

இன்று திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பை, வழமையை விட அதிகரிக்கவேண்டும் என்று, நீதிபதி மா இளஞ்செழியன் பொலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று கிழக்கு மாகாண கல்வித் பணிப்பாளர் தொடர்பிலான வழக்கு விசாரணை திருகோணமலை மேல் நீதி மன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்தநிலையிலே குறித்த உத்தரவை நேற்று நீதிபதி மா இளஞ்செழியன் பிறப்பித்தார்.

புதிய ஆளுநர் நியமனத்திற்கு முன்னர் கிழக்கு மாகாண கல்வித் பணிப்பாளராக MKM மன்சூர் பணியாற்றி வந்த நிலையில், தற்போது MT நிஸாம் புதிய ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் நியமிக்கப்பட்டார். திடீரென தனது பதவி பறிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் கல்வித் பணிப்பாளர் MKM மன்சூர் ஆட்சேபனை மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை கவனத்தில் எடுத்த நீதிமன்றம் கடந்த 5 ம் திகதி இடைக்காலத் தடை வித்தித்திருந்தது.

இந்தநிலையில், மனுதாரர் சார்பில் முன்னிலையாகும் சட்டத் தாரணி MC சபருலாவிற்கு மரண அச்ச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்த நிலையில், இன்று திருகோணமலை மேல் நீதி மன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment