Monday, March 18, 2019

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வான் விபத்தில் 4 பேர் பலி

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். வான் ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலீசார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வான் ஒன்றின் மீது, எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது வான் ரக வாகனத்தில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களில் வானில் பயணித்த மூன்று பேரும், பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உள்ளடங்குகின்றார்கள். இவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். இந்த நிலையில் விபத்து தொடர்பில் டிப்பர் வாகன ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment