Sunday, March 10, 2019

திடீரென மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 305 பேர் கைது - காவல்துறை

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது, சுமார் 305 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு காவல்துறை மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் மது போதையில் வாகனம் செலுத்தி, விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இது குறித்து காவல்துறையினருக்கு அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையிலான காலப்பகுதிகளில் 305 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது, 527 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் இரண்டே நாட்களில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment