Friday, March 15, 2019

1 வருட சிறைத்தண்டனை எதிநோக்கியுள்ள 14 சீனப் பிரஜைகள்

இலங்கைக்கு சுற்றுலா வீசாவில் வருகை தந்து சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து தொழில் ஈடுபட்ட 14 சீனப் பிரஜைகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காலி பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது ஒருவருக்கு தலா ஒரு வருட வீதம், சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த அனைவரும் 50 ஆயிரம் ரூபா வீதம் தண்டப் பணமும் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்து காலி தடல்ல பிரதேசத்தில் கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்தநிலையில், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த 14 போரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment