Tuesday, March 12, 2019

முஹமட் சியாம் கொலையின் மரண தண்டனை குற்றவாளிகள் எதிர்வரும் 21ம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைப்பு

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேர் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை, எதிர்வரும் மே மாதம் 21ம் திகதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல வர்த்தகர் முஹமட் சியாம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், வழங்கப்பட்ட மரண தண்டனைக்குஎதிராக தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு நீதியரசர்களான சிசிர தி ஆப்ரு, பிரியந்தஜயவர்தன, விஜித மலல்கொட, பிரீதி பத்மன் சுரசேன மற்றும் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதனிடையே, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வர்த்தகர் முஹமட் சியாம் கொலை தொடர்பில் தமக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், இதன் காரணமாக அந்த குற்றங்களில் இருந்து தம்மை குற்றமற்றவர்களாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறும் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட 6 பேர் தமது மேன்முறையீட்டு மனுவில் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment