Saturday, February 16, 2019

பிரதமர் இன்று முல்லைத்தீவுக்கு விஜயம்

இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில், அவர் வட மாகாணத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்த கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதன் ஒரு கட்டமாக பிரதமர் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு சென்று அங்கு இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வட மாகாணத்திலுள்ள மக்களை சந்தித்து, பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமரின் இன்றைய முல்லைதீவிற்கான விஜயம், முக்கிய நகர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments:

Post a Comment