Monday, February 18, 2019

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் - பிரேமநாத் டொலவத்த

தேர்தல் ஆணையகத்திற்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைகுழு மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கில் பல செயல்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சட்டத்தரணி பிரேமநாத் டொலவத்த தாக்கல் செய்துள்ளார்.

சட்டத்தரணி பிரேமநாத் டொலவத்தயின் சத்தியகவேச கயோ அமைப்பால், இந்த மனு உயர் நீதிமன்றில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment