Tuesday, February 12, 2019

அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் - வாசுதேவ நாணயக்கார விளக்கம்

சுங்கத் திணைக்களத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பிற்கு அமைச்சர் மங்கள சமரவீர பொறுப்புக் கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் சோசலிச மக்கள் முன்னணி நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.

அண்மையில் சுங்கத் திணைக்கள ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டமையால் சுங்கத்திணைக்களத்திற்கு பாரியளவில் வருமான இழப்பு மற்றும் சரக்குகளைக் கையாளுதலில் தாமதநிலை போன்ற பாதகமான விளைவுகள் ஏற்பட்டிருந்தன. ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு அமைச்சர் மங்கள சமர வீராவின் தன்னிச்சையான நடவடிக்கையே காரணமாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் மங்கள சமரவீர இதற்கு பொறுப்புக் கூறவேண்டும். என்று வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment