Monday, February 18, 2019

உலக காலநிலை மற்றும் வானிலை, பாரியளவில் பாதிப்படையும் நாடுகளில் இலங்கைக்கு இரண்டாவது இடம்

உலக காலநிலை மற்றும் வானிலை பாரியளவில் பாதிப்படையும் நாடுகளின் பட்டியலில், இலங்கை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே, சபாநாயகர் இதனை கூறியுள்ளார்.

இத்தகைய பாரிய பாதிப்புக்களை குறைக்க, நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என, சபாநாயகர் இதன்போது கோரிக்கை முன்வைத்தார்.

இலங்கையை ஆட்டிப்படைக்கும் இந்த பேரழிவுகளை தடுத்து நிறுத்துவதற்கு, அனைத்து அரசியல்வாதிகளும் முன்வர வேண்டும்
நமது சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அண்மையில், அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்த சபாநாயகர் கரு ஜெயசூரிய, இது குறித்து அனைவரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என, கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment