Friday, February 15, 2019

கிளிநொச்சியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க

வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று கிளிநொச்சிக்கு செல்கின்றார். கிளிநொச்சிக்கு செல்லும் பிரதமர், கிளிநொச்ச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதேவேளை, யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வடக்கிற்கு சென்ற பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பான கூட்டத்தில் நேற்று கலந்துகொண்டார்.

இதன்போது இந்த திட்டத்திற்கான மாதிரி வரைபை பார்வையிட்ட பிரதமர், குறித்த செம்மணி பகுதியில் நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்ட நவீன நகர திட்டம் சிறந்தது என பாட்டினார். அத்துடன்குறித்த நகரத்தை அமைப்பதற்கான நிதி மூலத்தை கண்டறிவதற்கு பிரதமர் ரணில் விக்கரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நேற்று கோப்பாய் பிரதேச செயலகத்தின் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார். அத்துடன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவு பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்த பிரதமர், நிலைமைகளை நேரில் கண்காணித்தார். அதனையடுத்து, மயிலிட்டி கிராமத்தில் மீள்க்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் பிரதமர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment