Sunday, February 17, 2019

ஊழல் மற்றும் மோசடிக்கு எதிரான மக்கள் அமைப்பு விரைவில்.

பாரிய ஊழல்களுக்கு எதிராக, பொது மக்கள் சார்பில் முன்னிலையாவதற்கான அமைப்பொன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதன் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 71 வருடங்கள் ஆகியுள்ளன. தற்போது நாடு கடன் சுமைக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த நாட்டில் பிறக்கவுள்ள குழந்தை ஒன்று, நான்கு இலட்சம் ரூபாய் கடன் சுமைக்கு தள்ளப்படும் நிலை தோன்றியுள்ளது.

இவ்வாறு பெறப்படும் மக்களின் பணத்தை மோசடி செய்த குற்றத்திலிருந்து, எவரும் மீள முடியாது. எனவே எதிர்காலத்தில் பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்களுக்கு எதிராக, பொது மக்கள் சார்பில் முன்னிலையாவதற்கான அமைப்பொன்றை, தமது தரப்பு விரைவில் கட்டியெழுப்பவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment