சபாநாயகருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - சிசிர ஜெயக்கொடி
சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.
புதிதாக கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு சபையின் தன்னிச்சையான செயற்பாடுகளை நிவர்த்திக்க, அதன் தலைவரான சபாநாயகர் கரு ஜெயசூரிய இதுவரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமைக்கு எதிராகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்த தீர்க்கமான தீர்மானத்தை, நாடாளுமன்ற குழு ஒன்று கூடி எடுக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இதற்குரிய நடவடிக்கைகள், தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment