Monday, February 11, 2019

பல்கலைக்கழக பிரவேசத்துக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

பல்கலைக்கழக பிரவேசத்துக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தினால் குறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய கல்வியாண்டுக்காக (2018/2019) விண்ணப்பிக்கும் கால எல்லை ஒரு வாரத்தினால் காலத்தினால் நீடிக்கப்பட்டும் கூட, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இவ்வருடம் பிரவேசத்திற்காக விண்ணப்ப எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 78900 என கணிப்பிடப்பட்ட நிலையில், இந்த வருடம் அந்த எண்ணிக்கை 77 ஆயிரத்தையும் தாண்டாதவகையிலேயே உள்ளதாக விண்ணப்பங்களை கணக்கிடும் போது கணிப்பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த வருடம் விண்ணப்பங்கள் வீழ்ச்சிக்கு online முறையே முக்கிய காரணம் என்றும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment