டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்களை அந்த நாட்டிலேயே சிறையில் வைப்பதே புத்திசாலித்தனமானது என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த தகவல் சகோதர நாளிதழில் வெளியாக்கப்பட்ட செய்தியில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ளது.
இந்த சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வந்தால் அவர்கள் சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், பாதாள உலக கூட்டத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி எடுத்துள்ள முயற்சி பாராட்டுக்குரியது எனவும் இராணுவத்தளபதி தெரிவித்ததாக குறித்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இது மாத்திரமன்றி மாகந்துரே மதூஷை கைது செய்ததன் மதிப்பு நிச்சயமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கே உரியது எனவும்,
போதைப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கு எஸ்.ரி.எப். படைப் பிரிவின் கட்டளை அதிகாரி எம்.ஆர். லத்தீப் எடுக்கும் நடவடிக்கை மிக முக்கியமானது என்பதுடன் அவரது சேவைக் காலம் நீடிப்பும் விசேட அம்சமாகும் எனவும் இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்ததாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment