Sunday, February 17, 2019

மதூஷுடன் தொட​ர்புகளைப் கொண்டிருந்த பாதாளக் குழு உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை

டுபாயில் கைதாகிய பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் தொட​ர்புகளைப் கொண்டிருந்த மேலும் சில பாதாளக் குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸ் விசேட அதிரடிப் படையின், திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினர் துபாயில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், கஞ்சிப்பானை இம்ரானின் உதவியாளர் உள்ளிட்ட பாதாளக் குழு உறுப்பினர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ஹெரோயின், துப்பாக்கிகள் உள்ளிட்ட பொருட்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று போதைபொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்காக, பொலிஸார் 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக
கடமைகளில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் முதல் கட்டமாக கொழும்பு மாவட்டத்தை மையமாகக் கொண்டு சுற்றிவளைப்புக்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment