Monday, February 11, 2019

வடக்கில் கல்வித்துறை பணியாற்றும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தல் - ஆளுநருக்கு முறைப்பாடு

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பலரும் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பில் வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கு அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடுகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது மற்றும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்த ஆளுநர் சுரேன் ராகவன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார்.

குறித்த குறைகேள் விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் மொத்தமாக 3 பேர் அங்கத்துவம் வகிப்பர்.
அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார். ஆகவே, குறித்த குழு நியமிக்கப்பட்டவுடன் தனது பணிகளை நேர்த்தியாக முன்னெடுக்கும் என்று நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment