Tuesday, February 19, 2019

வர்த்தகர்கள் காணாமல் போனமை தொடர்பில் விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கைது

இரண்டு வர்த்தகர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவரும் காணாமல் போய் இன்றுடன் 27 நாட்கள் ஆகின்றன. 31 வயதுடைய ரசேன் சிந்தக என்ற ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் , கடந்த 23 ஆம் திகதி வான் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவாகியுள்ளது. குறித்த இரண்டு போரையும் பொலிஸ் உடையில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

உறவினர்களின் வாக்கு மூலத்தின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment