Monday, February 18, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை, ஒருபோதும் ஏற்க மாட்டோம் - ஜீ.எல்.பீரிஸ்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கு பின்னர், ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு ஏற்ப முற்னெடுப்பதை, நாம் ஏற்க மாட்டோம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கருத்துரைத்த போதே, அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போது 11 இராணுவ வீரர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் விருப்பத்திற்கு அமைய முன்னெடுக்க அரசாங்கம் முற்படுகின்றது.

தற்போது வேறு ஒரு யோசனையை முன்வைப்பதே எமது நோக்கம். குறிப்பாக இந்த நாட்டின் தேவைக்கு ஏற்ப அது முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எமது அது முக்கியமான நோக்கம்.

யுத்தத்திற்கு பின்னர் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின் தேவைக்கு ஏற்ப முற்னெடுப்பதை நாம் ஏற்க போவதில்லை.

மாறாக இலங்கை மக்களை ஒன்றிணைத்தே, இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment