Friday, February 15, 2019

அஸ்கிரிய மகாநாயக்கரை, வட மாகாண ஆளுநர் சந்தித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர், கலாநிதி சுரேன் ராகவன், இன்றைய தினம் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு ஆளுநர், வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்றார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை, தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல வரவேற்றார்.

அதனை தொடர்ந்து புனித தந்த தாதுவினை தரிசித்து, வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், அங்கு இடம்பெற்ற வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன் பின்னர் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment