Friday, February 15, 2019

செம்மணி வீதியில் வைத்து பேருந்து மீது, கல்வீச்சுத் தாக்குதல்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது, நேற்று இரவு 10.15 மணியளவில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. செம்மணி வீதியில் வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளது.

பேருந்து சாரதிகளுக்கிடையிலான போட்டித் தன்மை காரணமாக இந்த சம்பவம் நேர்ந்திருக்கலாம் என்று குறித்த பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக நீண்ட நேரம் பேருந்து வீதியில் பயணிக்காமல் நின்றதால் பயணிகள் தமது பயணங்களில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment