ஜனாதிபதி, உலக வங்கியின் துணைத்தலைவருடன் பேச்சுவார்த்தை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெற்காசிய பிராந்தியத்திற்கான உலக வங்கியின் துணைத் தலைவர் ஹார்ட்விக் ஸ்கேஃபருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு, இந்த ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, நேற்றைய தினம் இடம்பெற்றதாக, குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து, அதிகாரபூர்வமான தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை. பெரும்பாலும் சமகால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, இந்த சந்திப்பில் இரு தரப்பும் கலந்துரையாடியிருக்கலாம் என எதிர்பார்க்காடுகிறது.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன, உலக வங்கியின் வதிவிட பிரதிநிதி, ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் டொக்டர் சரத் ராஜபத்திரன, தேசிய பொருளாதார சபையின் செயலாளர் நாயகம் பேராசிரியர் லலித் சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment