Wednesday, February 13, 2019

நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இன்றைய தினம் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரியொருவரை தாக்கியதாக, சமிந்த விஜேசிறி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்ய, சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்த நிலையிலேயே இவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

போதைப்பொருள் தடுப்பு காவல்துறை அதிகாரிகள் சிலருடன், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவருடைய பாதுகாப்பு அதிகாரிகள், சாரதி ஆகியோருக்கு இடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கைகலப்பு ஏற்பட்டிருந்தது.

இதன்போது, காயமடைந்த போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள், பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்யவதற்கான உத்தரவை வழங்கியிருந்த நிலையில், அவர் இன்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த சமிந்த விஜேசிறியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று முன் தினத்தில் கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment