Saturday, February 16, 2019

மத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே அனைத்திற்கும் முட்டுக்கட்டையாக உள்ளனர் – சம்பிக்க ரணவக்க

இலங்கையில் தற்போதுள்ள பல பிரச்சனைகளுக்கு, ஒரு சில மத தலைவர்களும், அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக உள்ளதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாகவே, பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டு நாட்டை மீட்டெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு - களனி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு, கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் இத்தகைய குழப்பங்களை விளைவிப்பவர்கள், நாட்டை பற்றி சற்று சிந்துத்து செயற்பட வேண்டும். இதனை விடுத்து அனைத்து வேலைதிட்டங்களையும் தடுக்க, ஏதேனும் ஒரு வகையில், குழப்பங்களை ஏற்படுத்துவதனால், இந்த நாட்டு மக்களே பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவதாக, அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment