Friday, February 15, 2019

யாழ் பெண்களுக்கு புதிய நுண்கடன் சட்டம் மூலம், தீர்வு - நிதி அமைச்சர்

யாழ்ப்பாணத்தில் நுண்கடன் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வரும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர உறுதி அளித்துள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

வறுமையை நுண்கடன் திட்டத்தினால் இல்லாமல் செய்யலாம். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காக இப்புதிய நுண்கடன் சட்டத்தனை அறிமுகம் செய்யவுள்ளோம் என்று நிதி அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக மக்களுக்கென விசேட சலுகைகள் காணப்படும் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில், மக்கள் இணைந்துக் கொள்வது சிறந்ததாகும். இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தில் எந்ததொரு வங்கியாவது சலுகையை வழங்க மறுத்தால், உடனடியாக 1925 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு முறையிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment