Tuesday, February 12, 2019

இலங்கை அரசாங்கத்தை, இந்தியா ஒருபோதும் பகைத்துக் கொள்ளாது - ராமகிருஷ்ணன்

இலங்கை அரசாங்கத்தைப் பகைத்து கொண்டு ஒருபோதும் இந்திய அரசு தமிழர்களுக்குத் தீர்வினை வழங்காது என, தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சித்தலைவருமான மஹிந்த ராஜபஷவின் இந்திய பயணம் தொடர்பாக அவர் கருத்து தெரிவித்த போதே, அவர் இதனை கூறினார்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கு ,அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உதவிகள் மற்றும் அவர்களின் கல்விக்கான உதவிகள் என்பன தொடர்பாக இலங்கையில் இருந்து வரும் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்திய அரசியல் தலைவர்களுடன் ஆக்கபூர்வமான பேச்சுக்களில் ஈடுபடுவதில்லை.

இந்திய அரசாங்கம் இலங்கையில் எந்த விதமான பாகுபாட்டையும் வைத்துக்கொள்ள போவதில்லை. இந்திய அரசாங்கத்திற்கு தமிழர்களுக்கு நன்மை செய்யவேண்டும் எனும் எண்ணம் உள்ளது. ஆனால் ஒரு நாட்டின் அரசாங்கத்தைப் பகைத்து கொண்டு எந்த விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.

தமிழர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்ற அக்கறை இந்திய அரசாங்கத்திடம் இருக்கின்றது. ஆனால் அவர்கள் தென்னிலங்கையுடன் இணைந்து, ஒரு தீர்வு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார்கள் என, தி ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர் ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment