Thursday, February 14, 2019

கிளிநொச்சி வெள்ளப்பெருக்குக்கு இரணைமடுக் குளமா காரணம் ? - அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு இரணைமடுக் குளம்தான் காரணமா? என்பது தொடர்பான உண்மை நிலையை கண்டறியும் வடமாகாண ஆளுநர் சுரேன் ரகவானால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை, ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்ச்சி பகுதி மக்கள் பெரும் வெள்ளப் பெருக்கு முகம் கொடுத்து இருந்தார்கள். இது குறித்த விசாரணைகளை ஆளுநரால் அமைக்கப்பட்ட குழுவினர் மேற்கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் குறித்த அறிக்கை ஆளுனரிடம் கையளிக்கபட்டுள்ளது.
இதன்போது ஆளுநரின் செயலாளரும் ஆளுனருடன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment