Tuesday, February 12, 2019

இளம் தாதியின் மரணம் குறித்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - நீதவான் நீதிமன்றம்.

ஹட்டன் பகுதியில் அண்மையில் தற்கொலை செய்துக் கொண்டதாக தெரிவிக்கப்படும் இளம் தாதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நீதியான தீர்ப்பை வழங்குவதற்கு முறையான விசாரணைகளை மேற்கொண்டு, உரிய சாட்சி பதிவுகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, நீதவான் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 19ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக, நீதவான் அறிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி இளம் தாதியொருவர், தமது மருத்துவர் கொடுத்த பாலியல் தொல்லைகளை தாங்க முடியாமையினால் தற்கொலை செய்து கொள்வதாக, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்கொலை செய்துக் கொண்டதாகக் கூறப்படும் தாதியின் மரணத்திற்கு, நீதியான விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று கோரி, இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தலவாக்கலை - வட்டகொடை பகுதியிலுள்ள மக்கள் இணைந்து இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment