Tuesday, February 19, 2019

இலங்கையின் புதிய வரைபடத்தை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

இலங்கையின் புதிய வரைபடத்தை அறிமுகப்படுத்துவதற்காக நாட்டின் நிலப்பரப்பபை மீண்டும் அளவீடு செய்வதற்கு, இலங்கை நில அளவீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் தகவலை நில அளவைத் திணைக்கள பணிப்பாளர் ஜீ.எம்.ஜீ. உதயகாந்த தெரிவித்துள்ளார்.

சமீப காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியிலுள்ள மாற்றங்கள் மற்றும் கொழும்பு நகரின் நகர நிர்மாணத்தினால், அதிகரித்துள்ள நிலப்பரப்பு போன்றவை தற்போது மேற்கொள்ளப்படும் நில அளவீடு மூலம் சரியான அளவை உறுதிப்படுத்தலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment