Wednesday, February 13, 2019

உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் போராட்டம் - கொழுப்பில் கடும் வாகன நெரிசல்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, உயர் தேசிய டிப்ளோமா கற்கை நெறி மாணவர்கள் இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டம் கொழும்பு – புஞ்சி பொரளை பகுதியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் காரணமாக புஞ்சி பொரளை மற்றும் கொழும்பு நகர மண்டப பகுதிகளில், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வருடங்களாக தமது கற்கை நெறியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத் தரும்படி வலியுறுத்தியே, மாணவர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com