Monday, February 18, 2019

தமிழ்த் தலைமைகள் தொடர்பில் வரதராஜப் பெருமாள் பாரிய குற்றச்சாட்டு

தமிழ் மக்கள் அழிந்து போனமைக்கு முக்கிய காரணம் தமிழ்த் தலைமைகள்தான் என, முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கருத்து வெளியிட்டுள்ளார். வவுனியாவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தலைமைகள் புலிகளின் பெயரைச் சொல்லி தங்களுடைய பதவிகளைக் காப்பாற்றி வருகின்றார்கள். இவர்கள் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரத்திற்காக எந்த முயற்சியினையும் ஏற்படுத்தாதவர்கள். சுமார் நான்கு வருடமாக, அபிவிருத்தி தொடர்பில் நாம் பேசப் போவதில்லை. மாறாக நாம் பேசினோமானால் உரிமைகள் கிடைக்காது என்று கூறிவிட்டு தற்போது, உரிமை கிடைத்தது போல ஓடுப்பட்டுத் திரிகின்றார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அமைச்சர்கள் வந்தால் அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களிடம் தாம் விட்ட பிழைக்கு மன்னிப்பு இவர்கள் கோரவேண்டும். அவ்வாறு அவர்கள் செய்யவில்லை. அரசாங்கத்தோடு சேர்ந்தால் துரோகி, அமைச்சர்களுடன் நின்றால் ஒட்டுக்குழு என்று கூறிவிட்டு அண்மைய நாட்களில் இவர்கள் எங்கே போய் நிற்கின்றார்கள்?

இந்தியாவுடன் எங்களுக்கு வெறுப்பு இந்தியா எங்களுக்கு உதவி செய்யாது என்றால் இந்தியாவின் உதவிகளை முற்றாக மறப்பதுதானே?
என்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments:

Post a Comment