Thursday, February 14, 2019

யாழ்.போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடம், பிரதமரால் திறந்து வைப்பு.

யாழ்.போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவரச சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத்தை, இன்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று பிற்பகல் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். 600 மில்லியன் ரூபாய் செலவில் இந்த விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், விஜயகலா மகேஸ்வரன், சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சித்தார்த்தன், சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாளையும், நாளை மறு தினமும் கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்கு இடம்பெற்று வரும் அபிவிருத்தி பணிகள் குறித்து ஆராயவுள்ளார்.

No comments:

Post a Comment