Thursday, February 14, 2019

ஜனாதிபதியின் உறுதிமொழி மீளப்பெறப்பட வேண்டும் - சர்வதேச நீதிபதிகள் கோரிக்கை.

இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பான உறுதிமொழியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரும்பப் பெறுமாறு, சர்வதேச நீதிபதிகளின் ஆணையம், வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவது, சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கடப்பாடுகளை, இலங்கை மீறுவதாக அமையும் என்றும் குறித்த ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதியின் இந்த செயற்பாடு நாட்டின் மனித உரிமைகளுக்கு தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று, ஆணையத்தின் ஆசிய பசுபிக் பணிப்பாளர் ஃப்றெட்றிக் றவ்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் தாம் மரண தண்டனையை எதிர்ப்பதாகவும், இதனை வாழ்வுரிமை மீறலாகவும், மனிதாபிமானமற்ற சீரழிவாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான தடைகள் வந்தாலும் இரண்டு மாதங்களில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது உறுதி என, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment