Friday, February 15, 2019

வகுப்பு தடையை நீக்குமாறு வலியுறுத்தி, மாணவர்கள் வீதியில் இறங்கி போராட்டம்.

வகுப்புத்தடையை உடன் நீக்குமாறு வலியுறுத்தி, இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ
பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மறித்து, அங்கு கல்வி பயின்று வரும் மாணவர்கள் ஒன்று திரண்டு, குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முதலாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதை செய்தமை, பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தடை ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் 54 மாணவர்களுக்கு, நேற்று வகுப்பு தடை விதிக்கப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 21ஆம் திகதிவரை குறித்த மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டது.

இந்த செயல்பாடு உடன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியே, பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்தை மேற்கொண்டனர். இதனை அடுத்து, விரைவில் மாணவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment