Tuesday, February 19, 2019

வர்த்தகர்கள் கடத்தல் விவகாரத்தில் கபில நிசாந்தவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

வர்த்தகர்கள் இருவர் காணாமல் போனமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை, விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காலி - ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரிஷீன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த 23 ஆம் திகதி வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்தவை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று கைது செய்திருந்தனர்.

குறித்த வர்த்தகர்கள் இருவரையும் பொலிஸ் உடையில் வந்த சிலர் கடத்திச் சென்றதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment