Tuesday, February 12, 2019

புதிய அரசிலமைப்பு வடக்கையும் கிழக்கையும் இணைக்க அல்ல - லக்ஷ்மன் கிரியெல்ல

புதிய அரசிலமைப்பின் ஊடாக மாகாணசபைகளைப் பலப்படுத்தவே அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். புதிய அரசிலமைப்பு வடக்கையும் கிழக்கையும் இணைக்க அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினக் கட்சிகள் அனைத்தும், ஒற்றையாட்சிக்கு பச்சைக்கொடி காண்பித்துள்ள சந்தர்ப்பரம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. நாம் செய்யும் ஒரே விடயம் மாகாணசபைகளை பலப்படுத்துவது மட்டுமே. சிலர், வடக்கையும் கிழக்கையும் நாம் இணைக்கப்போவதாகக் கூறுகிறார்கள். இன்னும் சிலர் மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கப்போவதாகக் கூறுகிறார்கள். இது எல்லாம் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள்.

நாம், இரண்டு தடவைகள் நாட்டின் அரசியலமைப்பை ஸ்தாபித்த போது அன்று தமிழ்க் கட்சிகள் தமது எதிர்ப்பைவெளிப்படுத்தினார்கள். ஆனால் தற்போது நிலைமை மாற்றம் அடைந்து தற்போது தமிழ்க்கட்சிகள் இந்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன என லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment