Tuesday, February 19, 2019

அடுத்த ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்சவே என, முடிவு செய்து விட்டனர் - உதய கம்மன்பில

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, இருப்பார் என, தேசியவாதிகளும், இடதுசாரிகளும் கூறி வருவதாக, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவது தொடர்பாக. இந்த இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்களைக் கூறினார்கள்.

எனினும், தற்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே, ஜனாதிபதி தேர்தலுக்கான மிகப் பொருத்தமான வேட்பாளர் என்று இரண்டு தரப்புகளும் குறிப்பிட்டுள்ளன.

அதன் காரணமாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதி, கோட்டாபய ராஜபக்ஷவே என்று, தேசியவாதிகளும், இடதுசாரிகளும் முடி செய்து விட்டனர்.

எவ்வாறாயினும் இது குறித்த இறுதி முடிவு, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளிலேயே உள்ளது என்று , நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

No comments:

Post a Comment