Saturday, February 16, 2019

புலம்பெயர் புலிகள் மக்களின் பணத்தை மக்களுக்காக தருகின்றார்கள் இல்லை. அழுகின்றார் சிவாஜிலிங்கம்.

நடைபெற்று முடிந்த யுத்தத்தின் பெயரால் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை புலம்பெயர் புலிகளிடம் வாரி வழங்கியுள்ளதாகவும், அப்பணத்தை இலங்கையிலே பாதிக்கப்பட்ட மக்களுக்காக செலவிட புலிகள் முன்வரவேண்டும் என தாம் பல முறை புலிகளிடம் வேண்டுதல் விடுத்தபோதும் அவர்கள் ஒரு சதத்தைக்கூட மக்களுக்காக வழங்க முன்வருகின்றார்கள் இல்லை என ரெலோ அமைப்பின் முக்கியஸ்தர் எம்கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம் சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் நேரடி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தெரிவிக்கையில், யுத்தத்திலே பாதிக்கப்பட்ட மக்கள் பலர் அங்கவீனர்களாகவும் தொழில்வாய்ப்பற்றவர்களாகவும் வறுமையில் வாடுகின்றனர். இந்தமக்களுக்கு நியாயமான உதவிகள் தேவைப்படுகின்றது. எனவே புலிகளின் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் புலம்பெயர் புலிகளிடம் அப்பணத்தை கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவுமாறு நாம் பலமுறை வேண்டுதல் விடுத்துள்ளோம். ஆனாலும் அவர்கள் அவ்வாறு செய்வதாக இல்லை.

மேலும் கடந்த காலங்களில் 12 தடவைகள் தான் ஜெனிவாவில் இடம்பெறும் ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் தனது சொந்த பணத்தை செலவிட்டு கலந்து கொண்டபோதும், கடந்த இரு தடவைகள் அங்கு செல்லவில்லை என்றும் அதற்கான காரணம் அவர்களிடமிருந்து எவ்வித பண உதவியும் கிடைக்காமையே என்றும் கூறினார்.

No comments:

Post a Comment