வடக்கிலுள்ள மக்கள் அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்கவில்லை என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பண்டாரகமயில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதிகார பகிர்வை வடக்கின் அரசியல் தலைவர்கள் எதிர்பார்க்கின்றார்களே தவிர வடக்கில் உள்ள தமிழ் மக்கள் அல்லர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் பொருளாதார பிரச்சினைக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆகவே வடக்கு மக்கள் தமது வாழ்க்கையை விருத்தி செய்யும் சிறந்த அபிவிருத்தி திட்டங்களையே எதிர்பார்க்கின்றனர். தங்களது வாழ்க்கையை சிறந்த முறையில் அமைத்துக்கொள்வதற்கான செயற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளதென அமைச்சர் ராஜித இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment