Monday, February 18, 2019

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவை நேற்று சந்தித்தார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்திட்டங்கள் மற்றும் உதவித்திட்டங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டத்துடன் எதிர்காலத்தில் வடக்கில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் கருத்து தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் , தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார். இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர், வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றியினை
தெரிவித்தார்.

இச்சந்திப்பினை நினைவுகூரும் வகையில் வடக்கு ஆளுநர் நாக மரக்கன்றுஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment