Saturday, February 16, 2019

புதிய அரசியல் அமைப்பு மாற்றம், தற்போது சாத்தியமற்றது - ரவுப் ஹக்கீம்

இலங்கையில் புதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது, தற்போதைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகவே காணப்படுவதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே, அவர் இதனை தெரிவித்தார். பல கட்சிகளின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையே, மாற்று யோசனைகளுடன் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் வெவ்வேறு கட்சிகள் இணக்கப்பாட்டை அடைய வேண்டிய பல அம்சங்கள் உள்ளதாகவும், இது தற்போதுள்ள ஆட்சிக் காலத்தில் சாத்தியமில்லாத ஒன்று எனவும், அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment