Monday, February 18, 2019

முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கம், இன்று கவனயீர்ப்பு போராட்டம்

முகாமைத்துவ உதவியாளர்கள் சங்கத்தினர் இன்றைய தினம், கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவனயீர்ப்பு போராட்டம், மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

முகாமைத்துவ உதவியாளர்கள், உத்தியோஸ்தர்கள் என 10க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அரசுக்கு எதிரான பல வாசகங்களையும், தமது கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு, போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசினால் தொடர்ச்சியாக கண்டுகொள்ளாமல் விடப்படும் தொழில் உரிமைகளான, தரம் 1,2,3 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு எம்.என்.4 சம்பளத்திட்டத்தின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும்,

பரீட்சை முறையிலான பதவி உயர்வுகள், முகாமைத்துவ உதவியாளர் சேவையைச் சேர்ந்தவர்களின் கடமைப் பொறுப்புக்களை முகாமைத்துவச் சேவையை சேர்ந்தவர்களுக்கு மாத்திரம் வழங்குதல் தவிர்க்கப்பட வேண்டும்.

முகாமைத்துவ உதவியாளர் சேவை என்பதை முகாமைத்துவ உத்தியோகஸ்தர் சேவை என பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment